சலனமற்ற எரிக் கரையின் அமைதி
ஓசையின்றி நீந்தும் அன்னப் பறவைகள்
வாகனத் தடம் இல்லா ஒற்றையடிப் பாதை
தொலைபேசியின் தொல்லை இல்லாத தொலைவு
இணையதளத்தின் இம்சை இல்லா இயற்கை
மலர்களின் மணம் கலந்த தென்றல்
ஒற்றைக் குயில் இசையின் இனிமை
இதுதான் நான் தேடித் தவிக்கும் தனிமை...

No comments:
Post a Comment